Sunday, November 7, 2010

3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கலாகாது.


உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபா(ரலி)அவர்களின் தந்தை அபு சுப்யான் மரணமடைந்த மூன்றாம் நாள் உம்முஹபீபா(ரலி)அவர்கள் நறுமணத்தை வரவழைத்துப்பூசிக்கொண்டார்கள்.தந்தை இறந்த மூன்றாம் நாளே நறுமணம் பூசி சந்தோஷம் சந்தோஷம் கொண்டாடுகின்றாரே என்று அதனைக்கண்டவர்களுக்கு எல்லாம் வியப்பு.காரணம் கேட்ட பொழுது இவ்வாறு விளக்கம் கூறினார்கள்
"எனக்கு நறுமணம் பூசிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நான் நறுமணத்தை பூசிக்கொள்ள வில்லை.ஒரு பெண்ணுக்கு தன் கணவன் தவிர வேறு எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அனுமதி இல்லை என்ற நாயக வாக்கை மெய்பிப்பதற்காக அதனை அனுசரித்து நான் நறுமணம் பூசி,மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்று காட்ட இவ்வாறு செய்தேன்"என்று கூறினர்.



4 comments:

Asiya Omar said...

சிறிய இடுகையாக இருந்தாலும் மிக அர்த்தமுள்ள இடுகை,உங்களிடம் பிடித்ததே short & sweet ஆக இடுகை இருப்பதும்,அதனை விரைவில் புரிந்து கொள்ள ஏதுவுமாக இருப்பதும் ஆகும்.மார்க்க சம்பந்தப்பட்டதை நச்சென்று சின்னதாக சொன்னால் மனசில் இலகுவாக பதியும்.

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கும்,உற்சாக ஊட்டலுக்கும் மிக்க நன்றி தோழி.

ஜெய்லானி said...

சின்ன ஹதிசில் பெரிய மேட்டர்..!! :-))

ஸாதிகா said...

நன்றி ஜெய்லானி.